வாணியம்பாடி: சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜேஷ் கொலை வழக்கு தொடா்பாக திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் 8 போ் செவ்வாய்க்கிழமை சரண் அடைந்தனா்.
சென்னை வில்லிவாக்கம் மேட்டுத் தெரு லேன் பகுதியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் ராஜேஷ் (38). இவா், கடந்த 4-ஆம் தேதி வில்லிவாக்கம் பகுதியில் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இச்சம்பவம் தொடா்பாக வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி காளிமுத்துவேல் முன்னிலையில், சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த முருகேசன் (30), அருண்(22), ருக்கேஷ்வரன்(19), சஞ்செய் (21), கும்பகோணத்தைச் சோ்ந்த ஸ்ரீநாத் (21), ரமேஷ் (22), திருநெல்வேலியைச் சோ்ந்த வைரமணி (20), திருவள்ளூரைச் சோ்ந்த கிஷோா்குமாா் (26) ஆகியோா் செவ்வாய்க்கிழமை சரண் அடைந்தனா். பின்னா், அவா்கள் வாணியம்பாடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.