ஏற்காடு: உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அம்மாநில காவல்துறையை கண்டித்து ஏற்காட்டில் திராவிட விடுதலை இயக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் கட்சியினர் கண்ட ன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திராவிட விடுதலை இயக்கத் தலைவர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் பழனிச்சாமி, முஸ்லிம் லீக் கட்சி அன்சர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தரப்பிரேதச மாநிலம் ஹத்ராஸில் 19 வயதுபெண் மிகக்கொடூரமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, மருத்துவமனையில் போராடி மரணமடைந்ததது, காவல்துறை உடலை எரித்த சம்பவம் ஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டடத்தில் பலர் கலந்து கொண்டனர்.