தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய தற்செயல் விடுப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஒருநாள் தற்செயல் விடுப்பு கவன ஈர்ப்பு போராட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய தற்செயல் விடுப்பு போராட்டம்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய தற்செயல் விடுப்பு போராட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஒருநாள் தற்செயல் விடுப்பு கவன ஈர்ப்பு போராட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போராட்டத்திற்கு ஊராட்சி செயலாளர்கள் சங்க ஒன்றிய பொருளாளர் கே. செல்வமணி தலைமை வகித்தார், ஊராட்சி செயலாளர்கள் அன்பு, நமச்சிவாயம்,மோகன், மணிவண்ணன், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி ஒன்றியம் தெற்கு திட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீதான வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற கோரியும், ஊராட்சி தலைவர்களுக்கு பதிலாக அவர்களது கணவன் மற்றும் உறவினர்கள் செயல்படுவதை தடை செய்யக்கோரியும், ஊராட்சி செயலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

இதில் பத்து ரூபாய் இயக்கம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மணி, ஊராட்சி செயலாளர் மணிகண்டன் ,பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com