கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவையொட்டி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் கொடியேற்றி வைத்தாா். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை கம்யூனிஸ்ட் இயக்கத்தினா் கொண்டாடி வருகின்றனா்.
தியாகராய நகரில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் சனிக்கிழமை கொடியேற்றி வைத்தாா். நிகழ்ச்சியில் மத்தியக்குழு உறுப்பினா்கள் டி.கே.ரங்கராஜன், பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினா் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினா்கள் க.உதயகுமாா், வெ.ராஜசேகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.