கள்ளக்குறிச்சி அருகே பைக்கில் சென்றவர்களை மறித்து வழிப்பறி

கள்ளக்குறிச்சி அருகே பைக்கில் சென்றவர்களை வழிமறித்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே பைக்கில் சென்றவர்களை மறித்து வழிப்பறி

கள்ளக்குறிச்சி அருகே பைக்கில் சென்றவர்களை வழிமறித்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் குணசேகரன் (39). இவரது உறவினர் மதியழகன்(49). இவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள குணசேகரனின் மகள் வீட்டிற்குச் செல்வதற்காகச் செவ்வாய்க்கிழமை காலை, தஞ்சாவூரிலிருந்து தியாகதுருகம் நோக்கி பைக்கில் வந்தனர்.

இன்று அதிகாலை தியாகதுருகம் அருகே உள்ள கடையநல்லூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், தியாகதுருகம் போக வழி கேட்பது போல் நிறுத்திக் கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி இவர்கள் இருவரிடமிருந்து செல்போன்கள் ரூ.10 ஆயிரம் பணம் பறித்துக்கொண்டு, இருவரையும் கீழே தள்ளி விட்டு, கையில் கத்தியால் கிழித்து விட்டுச் சென்றுள்ளனர். 

இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குரங்கு குல்லா அணிந்து வந்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com