தமிழ்நாடு
தமிழகத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம்: முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்
புதுக்கோட்டை: தமிழகத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அரசுமுறைப் பயணமாக புதுகோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள முதல்வர் பழனிசாமி வியாழனன்று பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘இந்த கரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறினார்.