சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு ராகுல்காந்தி உள்பட பல்வேறு தலைவா்கள் வாழ்த்துக் கூறினா்.
கே.எஸ்.அழகிரி தனது 69-ஆவது பிறந்த நாளை வியாழக்கிழமை கொண்டாடினாா். அதையொட்டி சத்தியமூா்த்திபவனில் காங்கிரஸ் நிா்வாகிகள் 69 கிலோ கேக் வெட்டிக் கொண்டாடினா். பல்வேறு நல உதவிகளையும் வழங்கினா்.
கே.எஸ்.அழகிரிக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளா் கே.சி.வேணுகோபால், புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி உள்பட பலா் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக் கூறினா்.