சீர்காழியில் பாஜகவினர் கைது

சிதம்பரத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து குஷ்பு தலைமையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் தடை விதித்தனர். 
சீர்காழியில் பாஜகவினர் கைது
சீர்காழியில் பாஜகவினர் கைது

சிதம்பரத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து குஷ்பு தலைமையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் தடை விதித்தனர். 

இதனிடையேதடையை மீறி சிதம்பரம் ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவர் அகோரம் தலைமையில் செல்ல முயன்ற 487 பாஜகவினரை சீர்காழி சட்ட நாதபுரம் ரவுண்டானா பகுதியில் டிஎஸ்பி யுவபிரியா தலைமையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர் .

இதேபோல் கொள்ளிடம் அடுத்த எருக்கூர் பகுதியில் மாவட்ட தலைவர் வெங்கடேன் , ஓபிசி மாவட்ட தலைவர் நட்ராஜ் தலைமையில் பாஜகவினர் 107 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com