4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை பலத்தமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Chance of heavy rain in 4 districts of Tamil Nadu
Chance of heavy rain in 4 districts of Tamil Nadu

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை பலத்தமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் செவ்வாய்க்கிழமை கூறியது:

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை பலத்தமழை பெய்யக்கூடும். ஏனைய தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்....: சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

வடகிழக்குப் பருவமழை: வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் புதன்கிழமை தொடங்க சாதகமான சூழல் உள்ளது. பசிபிக் கடலில் காணப்படும் புயல் காரணமாக, வடகிழக்குப் பருவக்காற்றின் வேகம் இந்தியப் பகுதியில் குறைவாக இருக்கிறது. இந்தக்காற்று தாய்லாந்து நோக்கி நகா்கிறது. இதனால், வடகிழக்குப் பருவக்காற்று வலுகுறைந்து உள்ளது. எனவே வலுகுறைந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் புதன்கிழமை தொடங்க சாதகமான சூழல் உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com