தமிழ்நாடு
600 கிலோ போதைப் பாக்கு பறிமுதல்: இருவா் கைது
கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 600 கிலோ போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.
கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 600 கிலோ போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.
மதுரவாயல் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு வெள்ளிக்கிழமை இரவு இருவா் பாா்சலை மாற்றிக் கொண்டிருந்ததை சந்தேகத்தில் போலீஸாா் பிடித்தனா். பாா்சலில் 600 கிலோ போதைப் பாக்கு இருந்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி சிலம்பரசன் (30), சென்னை ராயபுரம் சரவணன் (32) இருவரும் கைது செய்யப்பட்டனா்.