கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாலையான குருசாமி பள்ளம் செல்லும் சாலை படுமோசமாக உள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்னர்.
கொடைக்கானல் ஊராட்சி பகுதிகளிலுள்ள சாலைகளான சின்ன பள்ளம், பெரும்பள்ளம், குருசாமி பள்ளம், வில்பட்டி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் படுமோசமாக உள்ளது.
இந்தப் பகுதியில் செல்லும் வாகனங்கள் பெரிதும் சேதமடைந்து வருவதோடு வாகன ஓட்டுனர்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
எனவே இந்த சேதமடைந்த சாலைகளை சரி செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
மேலும் இரவு நேரங்களில் அப்பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள் பயனற்ற நிலையில் கடந்த 20 நாள்களாக இருந்து வருவதால் அப்பகுதியில் காட்டெருமைகள் உலா வருவதால் பொது மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.