மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 12,894 கன அடியாக அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 8,622 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை 12,894 கனஅடியாக அதிகரித்தது. புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 91.78 அடியாக இருந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 15,000 கனஅடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 54.70 டி.எம்.சி.யாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.