புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும், கரோனா காலகட்டத்தில் நீட் தேர்வை நடத்தக்கூடாது, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறை தடுப்பை மீறி திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் இருதரப்பிற்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.