ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். 
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்


சென்னை: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். 

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டார்.  இந்த தகவல் அதிமுகவரினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வழக்கான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனைகள் முடிந்ததும் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியமோ அல்லது மாலையோ அவர் வீடு திரும்புவார் என தகவல் வெளியானது. 

இந்நிலையில், பரிசோதனைகள் முடிந்ததை அடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடு திரும்பியுள்ளார். அவரது உடல் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com