ஜெ.சுத்தானந்தன் பிறந்தநாள் விழா: ஈரோட்டில் மாலை அணிவித்து மரியாதை

ஈரோட்டில் ஜெ.சுத்தானந்தனின் 77வது பிறந்தநாள் விழா நேற்று ஈரோட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 
ஈரோட்டில் ஜெ.சுத்தானந்தனின் 77வது பிறந்தநாள் விழா நேற்று ஈரோட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 
ஈரோட்டில் ஜெ.சுத்தானந்தனின் 77வது பிறந்தநாள் விழா நேற்று ஈரோட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

ஈரோடு செங்குந்த கல்வி நிறுவனங்களின் முன்னாள் தாளாளரும், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் முன்னாள் மாநில தலைவருமான உத்யோக் ரத்னா, நெசவாளர் நேசன், கல்வி காவலர் ஜெ.சுத்தானந்தனின் 77வது பிறந்தநாள் விழா நேற்று ஈரோட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

விழாவையொட்டி, ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஜெ.சுத்தானந்தனின் முழு உருவச்சிலைக்கு நேற்று தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

இந்நிகழ்ச்சிக்கு, அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் சோழா ஆசைத்தம்பி, ஈரோடு வீக்கோப் டெக்ஸ் தலைவர் யுனிவர்சல் நந்தகோபால் ஆகியோர் தலைமை தாங்கினர். செங்குந்தர் கல்வி கழக செயலாளர் சிவானந்தன் முன்னிலை வகித்தார்.

செங்குந்தர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தாளாளர் வேலு, செங்குந்தர் மகளிர் பள்ளி தாளாளர் கணேஷன், கல்வி கழக உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கிருஷ்ணகுமார், மாசிலாமணி, சங்க செயற்குழு உறுப்பினர்கள் வஜ்ரவேல், குப்புராஜ், சேலம் பாலன், சக்திவேல், வைரம், பிரதாப், விக்ரம், யோகி, திருநாவுக்கரசு, காமராஜ், குஜரால், பாக்சர் கிருபா ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஜெ.சுத்தானந்தன் பிறந்தநாள் விழாவையொட்டி, நேற்று பிறந்த செங்குந்த சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com