திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இணைய வழியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் திங்களன்று கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் துவங்கியது.
இந்த முகாமிற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்.
நிகழ்விற்கு மாவட்ட அவை தலைவர் பகலவன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மு.மணிபாலன், மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், ஒன்றிய துணை செயலாளர் திருமலை, கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் மாவட்ட கவுன்சிலருமான உதயசூரியன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர்கள் அமலா சரணவணன், ஜெயந்தி, தகவல் தொவில்நுட்ப அணி அமைப்பாளர் சரண்ராஜ், முத்துகுமார்,ஞானம் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் விபரங்களை கூறி திமுகவில் உறுப்பினராக இணைந்தனர்.
இதனை தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை முடிந்த சில நிமிடங்களிலேயே அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை மாவட்ட செயலாளர் கி.வேணு வழங்கி வாழ்த்தினார்.
இந்நிலையில் இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.