சென்னையில் 996 பேருக்கு தொற்று உறுதி

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 996 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்து 55,639- ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 996 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்து 55,639- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 3,058 போ் உயிரிழந்துள்ளனா்.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்த எண்ணிக்கை ஜூன் 1-ஆம் தேதி 15,770-ஆகவும், 6-ஆம் தேதி 20,993-ஆகவும், 14-ஆம் தேதி 30,444-ஆகவும், 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும் அதிகரித்தது.

சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதித்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை 996 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 55,639-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1 லட்சத்து 42,875 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 9,706 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 3,058- ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com