நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு எம்எல்ஏ பாராட்டு

சீர்காழியில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியரை எம்எல்ஏ பிவி.பாரதி பாராட்டி வாழ்த்துதெரிவித்தார்.
நல்லாசிரியர் விருதுபெற்ற தலைமைஆசிரியர் அறிவுடைநம்பியை,பாராட்டி வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ பிவி.பாரதி
நல்லாசிரியர் விருதுபெற்ற தலைமைஆசிரியர் அறிவுடைநம்பியை,பாராட்டி வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ பிவி.பாரதி

சீர்காழியில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியரை எம்எல்ஏ பிவி.பாரதி பாராட்டி வாழ்த்துதெரிவித்தார்.

சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி. இவரது கல்வி சேவையை பாராட்டி நிகழாண்டு தமிழக அரசின் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.

விருதுபெற்ற தலைமை ஆசிரியரை சீர்காழி எம்எல்ஏ பிவி.பாரதி நேரில் பள்ளிக்குச் சென்று சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது பள்ளி எழுத்தர் சாமிநாதன், நகர ஜெ.பேரவை செயலாளர் ஏவி.மணி, வழக்குரைஞர் நெடுஞ்செழியன்,மாவட்ட பிரதிநிதி கார்த்தி,தனியார் துப்புறவுப் பணி மேற்பார்வையாளர் அலெக்ஸ், ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com