குமுளி மலைச்சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் குமுளி மலைச்சாலையில் விழுந்த மரத்தால் திங்கள்கிழமை இரவு  2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
குமுளி மலைச்சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு
குமுளி மலைச்சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப் குமுளி மலைச்சாலையில் விழுந்த மரத்தால் திங்கள்கிழமை இரவு  2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையான லோயர் கேம்ப் குமுளி மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகே திடீரென திங்கள்கிழமை இரவு பெரிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. 

இதனால் கேரளத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களும் தமிழகத்தில் இருந்து கேரளம் செல்லும் வாகனங்களும் செல்ல முடியாமல் சாலையிலேயே நிறுத்தப்பட்டன.


இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த குமுளி காவல்துறையினர்  இயந்திரங்களைக் கொண்டு சாலையில் விழுந்த மரத்தினை வெட்டி அகற்றி போக்குவரத்து செல்வதற்கு ஏதுவாக மரத்தினை சாலையோரமாக கொண்டு சென்றனர். 

இதன் பின்னரே வாகனப் போக்குவரத்து அப்பாதையில் தொடங்கியது. இதன் காரணமாக சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக குமுளி மலைச் சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com