திருச்சி தில்லை நகரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைக்கும் மசோதாக்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.
தில்லை நகரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு நகல் எரிக்கும் போராட்டம் நடத்தினர். இதில் தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.