புதுச்சேரியில் முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் காலை நடைபயிற்சி மேற்கொண்ட முன்னாள் கவுன்சிலர் சுந்தரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் முன்னாள் கவுன்சிலர் சுந்தர்
புதுச்சேரியில் முன்னாள் கவுன்சிலர் சுந்தர்

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் காலை நடைபயிற்சி மேற்கொண்ட முன்னாள் கவுன்சிலர் சுந்தரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி காமராஜ் நகரைச் சேர்ந்தவர் சுந்தர் (எ) மாந்தோப்பு சுந்தர். முன்னாள் கவுன்சிலரான இவர் கோரிமேடு ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதே போல் புதன்கிழமை காலை அப்பகுதியில் சுந்தர் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் சுந்தரை வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியது. இதில் சுந்தர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

இது குறித்துத் தகவலறிந்து அங்கு வந்த தன்வந்திரி நகர் காவல்துறையினர் சுந்தர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முன்னாள் கவுன்சிலரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com