கரோனா தடுப்பு நடவடிக்கை: முதல்வர் பேசும் விழிப்புணர்வு ஆடியோ வெளியீடு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் விழிப்புணர்வு ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் விழிப்புணர்வு ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த ஆடியோவில், 'வணக்கம் உங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறேன். உலகெங்கும் தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸை ஒழிக்க அதிகமு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. உங்கள் ஒவ்வொருவரின் நலனும் எனக்கு முக்கியம். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எனவே, கரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ள விழித்திருங்கள், விலகியிருங்கள், வீட்டிலேயே இருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று பேசியுள்ளார். 

இந்த ஆடியோ வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், வோடபோன், ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இந்த ஆடியோ வழங்கப்பட்டு, அவர்களது வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு அழைப்பாக வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com