சென்னையில் ஏப்ரல் 15-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஏ.கே. விஸ்வநாதன்

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையில் 15-ம் தேதி வரை ஊரடங்கு 
சென்னையில் ஏப்ரல் 15-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஏ.கே. விஸ்வநாதன்

சென்னை: கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையில் மட்டும் அதனை 15-ம் தேதி வரை நீட்டித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்று 8 நாட்கள் கடந்திருக்கும் நிலையில், ஏப்ரல் 14-ம் தேதியோடு ஊரடங்கு உத்தரவு நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில், சென்னையில் மட்டும் 144 தடை எனப்படும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 15-ம் தேதி காலை 6 மணிவரை நீட்டித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com