மதுரை மேலூரில் மருந்தகம் தவிர மற்ற அனைத்துக் கடைகளையும் மூட நகராட்சி நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மேலூர் பகுதியில் அடுத்த 4 நாட்களுக்கு அனைத்துக் கடைகளையும் மூட அந்நகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருந்தகம் தவிர்த்து மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்படுவதாகவும், அதே நேரத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.