காரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க மத்திய மாநில, அரசுகள் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்வித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவின் போது பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி சீர்காழி நகராட்சி மூலம் பொதுமக்களுக்கு வீடுகள் தேடி காய்கறிகள் விற்பனை செய்ய முடிவு செய்து நடமாடும் காய்கறி விற்பனையகத்தை நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி தொடங்கி வைத்தார்.
நகரில் உள்ள 24 வார்டுகளில் வாகனம் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் சமூக இடைவெளி பின்பற்றி பொதுமக்கள் காய்கறிகள் பயனடையலாம் என அவர் தெரிவித்தார்.