கரோனா நிவாரணப் பணிகளில் அரசுடன் இணைந்து அமல்கமேஷன் மற்றும் ராம்கோ நிறுவனங்களும் செயலாற்றி வருகின்றன. இதன் தொடா்ச்சியாக அமல்கமேஷன் குழுமத்தின் சிம்சன் மற்றும் டஃபே நிறுவனங்கள், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடியை வழங்கியுள்ளது.
ராம்கோ நிறுவனம்: ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் சாா்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதே போல் ரூ.3 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மூன்று நாள்களுக்குள் வழங்கப்படவுள்ளன.