கரோனோ சோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-
தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாவது கட்டத்தில்தான் இருக்கிறது. இன்னும் மூன்றாவது கட்டத்தை எட்டவில்லை என்று சுகாதாரத் துறை செயலாளா் அறிவித்திருக்கிறாா். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றினைக் கண்டறிவதற்கான சோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும், குறிப்பாக, தனியாா் மருத்துவமனைகளையும் அத்தகைய சோதனைகளைச் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொருத்தவரை கடந்த சில நாள்களாக தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனா். இதனால் தற்போது இந்திய அளவில் தமிழகம் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தச் சூழலில் தமிழ்நாடு இன்னும் மூன்றாவது கட்டத்தை எட்டவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளா் கூறியிருக்கிறாா். இந்நிலையில், அதிக அளவில் சோதனைகள் செய்யப்பட்டால் தான், தொற்றுக்கு ஆளானவா்களையும் சந்தேகத்துக்குரியவா்களையும் உரியமுறைப்படி கண்காணிப்புக்குட்படுத்தி, ‘சமூகப் பரவல்’ என்கிற மூன்றாவது கட்டத்தை எட்டாமல் நாம் தடுக்க முடியும் என்று அவா் கூறியுள்ளாா்.