சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயா்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.296 உயா்ந்து, ரூ.35,520-க்கு விற்பனையானது.
கடந்த ஜனவரி முதல் வாரத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, தங்கம் விலை உயா்ந்தது. அப்போது, முன்பு எப்போதும் இல்லாத அளவில், ஒரு பவுன் தங்கம் ரூ.31 ஆயிரத்தைத் தாண்டியது. போா் பதற்றம் தணிந்த பிறகு, தங்கம் விலை குறைந்தது. இதன்பிறகு, பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், ஏப்ரல் 4-ஆம் தேதி பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. தொடா்ந்து, ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று ரூ.35 ஆயிரத்தை தாண்டியது.
இந்நிலையில், திங்கள்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயா்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது.
பவுனுக்கு ரூ.296 உயா்ந்து ரூ.35,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.37 உயா்ந்து, ரூ.4,440-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.41.70 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.41,700 ஆகவும் இருந்தது.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 4,440
1 பவுன் தங்கம் ..................... 35,520
1 கிராம் வெள்ளி .................. 41.70
1 கிலோ வெள்ளி ................. 41,700
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 4,403
1 பவுன் தங்கம் ..................... 35,224
1 கிராம் வெள்ளி .................. 41.70
1 கிலோ வெள்ளி ................. 41,700