சீர்காழி காவல் நிலையத்தில் போலீசாருக்கு உதவியாக 70க்கும் மேற்பட்டோர் பிரண்ட்ஸ் ஆப் போலீசாக இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு முகக்கவசம், சீருடை வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் இன்று 70-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை பிரண்ட்ஸ் ஆப் போலீஸாக இணைத்துக்கொண்டனர். நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் காலை 6 மணி முதல் 1 மணி வரை அத்தியாவசிய தேவைகளை வாங்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மளிகை கடை, காய்கறி கடை மற்றும் போக்குவரத்து இவைகளை ஒழுங்குபடுத்தவும் சமூக இடைவெளியை அனுசரிக்க போதிய காவலர்கள் இல்லாததால் பிரண்ட்ஸ் ஆப் போலீஸாராக 70-க்கும் மேற்பட்டோர் சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் முன்னிலையில் தங்களை காவல் பணியில் இணைத்துக் கொண்டனர்.
அப்போது அவர்கள் எவ்வாறு பொதுமக்களிடம் பணி செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைத்தார். ஒவ்வொருவருக்கும் 3 மணி நேரம் மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. சுழற்சிமுறையில் பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தனர். இதனால் காவல்துறையினருக்கு மிகுந்த உதவியாக இருக்கும். பொதுமக்கள் சமூக இடைவெளியில் நோய் பரவாமல் தடுக்க உதவியாக பணியில் ஈடுபடுத்தி கொண்டனர்.