கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட திருச்சி மாநகரம்!

திருச்சி மாநகர பகுதிகளில் வசிக்கும்  பொதுமக்களில் 26 பேர் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 
கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட திருச்சி மாநகரம்!

திருச்சி மாநகர பகுதிகளில் வசிக்கும்  பொதுமக்களில் 26 பேர் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 

அவர்களில் 23 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மீதமிருந்த 3 பேரும்  குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினர். இதன்மூலம் கரோனா பாதிப்பு இல்லாத மாநகரமாக திருச்சி மாறியுள்ளது.

இம்மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த 6 பேர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என 14 பேருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com