திருச்சி மாநகர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் 26 பேர் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களில் 23 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மீதமிருந்த 3 பேரும் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினர். இதன்மூலம் கரோனா பாதிப்பு இல்லாத மாநகரமாக திருச்சி மாறியுள்ளது.
இம்மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த 6 பேர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என 14 பேருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.