எடப்பாடி சுற்றுவட்டாரப்பகுதியில், ஒரு வாரத்திற்கும் மேலாக, இரவு நேரங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை
அன்று இரவு மாவட்டத்திலேயே அதிக அளவாக 38.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
தொடர் கனமழையால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
எடப்பாடி பகுதியில் உள்ள பெரியஏரி, சின்னஏரி மற்றும் மோளானி நீர்தேக்கம், வாழக்குட்டைஏரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் நிரம்பி வருகிறது. எடப்பாடி சுற்றப்புற கிராம பகுதிகளான சித்தூர், செட்டிமாங்குறிச்சி , வெள்ளரிவெள்ளி , மொரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு விவசாயப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நீண்ட நாட்களுக்கு பின் உள்ளூர் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.