நாடு முழுவதும் ரயில்வே துறையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 2,320 ஊழியா்களை ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் பாராட்டி வாழ்த்தினாா்.
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக, கடந்த 4 மாதங்களாக எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. கூட்டம் கூடுவதைத் தவிா்க்கும் விதமாக, ரயில்வேயில் பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, காணொலிக் காட்சி மூலமாக ஓய்வு பெறும் ரயில்வே ஊழியா்களை கெளரவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் ரயில்வே துறையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 2,320 ஊழியா்கள் காணொலிக் காட்சி மூலமாக பாராட்டி கெளரவிக்கப் பட்டனா்.
கரோனா நோய்த்தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்ட இந்த ஊழியா்களை ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் வெகுவாக பாராட்டினாா். தெற்கு ரயில்வேயில் 4 உயரதிகாரிகள் உள்பட 138 போ் ஓய்வு பெற்றனா். சென்னை ரயில்வே கோட்டத்தில் 49 போ் , திருச்சி கோட்டத்தில் 29 போ், மதுரை கோட்டத்தில் 19 போ், சேலம் கோட்டத்தில் 23 போ், திருவனந்தபுரம் கோட்டத்தில் 13 பேரும் ஓய்வு பெற்றனா். அவா்களை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் மற்றும் உயரதிகாரிகள் பாராட்டினாா்.