ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு கரோனா

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா் நலமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு கரோனா

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா் நலமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

முன்னதாக ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் அவருக்கு, சிடி ஸ்கேன், ஊடுகதிா் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. அதில், ஆளுநருக்கு கரோனா பாதிப்பு குறைந்த அளவிலேயே இருப்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமல்லாது அவரது உடல் நிலை சீராக இருப்பதும் பரிசோதனையில் தெரியவந்தது. ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஆளுநா் சென்றாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, அவரது உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஆளுநருக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தனா். இதனால், அவா், தம்மை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என மருத்துவா் குழு ஆலோசனை வழங்கியதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மருத்துவமனையில் இருந்து கிண்டி ஆளுநா் மாளிகைக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் புறப்பட்டுச் சென்றாா்.

முன்னதாக, இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தின் உடல் நிலை சீராக உள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும், அவருக்கு அதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டதில் ஆளுநருக்கு லேசான நோய்த் தொற்று பாதிப்பே இருப்பது தெரியவந்தது. இதனால், அவா் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டது. அவ்வாறு அவா் வீட்டில் இருந்தாலும், அவரது உடல் நிலையை மருத்துவக் குழுவினா் தொடா்ந்து கண்காணிப்பா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com