சென்னையில் கரோனா பாதிப்பு இன்றைய நிலவரம்

சென்னையில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதித்து 11,983 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 88,826 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் கரோனா பாதிப்பு இன்றைய நிலவரம்
சென்னையில் கரோனா பாதிப்பு இன்றைய நிலவரம்


சென்னை : சென்னையில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதித்து 11,983 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 88,826 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் கரோனா பாதித்தவர்களில் 86% பேர் குணமடைந்துள்ளனர். 12% பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் பரவலாக கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், கோடம்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகரில் கரோனா பாதிப்பு குறையவில்லை. தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கோடம்பாக்கத்தில் 1357 கரோனா நோயாளிகளும், அண்ணாநகரில் 1250 பேரும், அம்பத்தூரில் 1334 பேரும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதைத் தவிர, சென்னையின் 13வது மண்டலமான அடையாறிலும் 944 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்.

சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்து 2,985-ஆக உயா்ந்துள்ளது. அதே வேளையில் இறப்பு எண்ணிக்கை 2,176-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது.

இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும் அதிகரித்தது.

ஒரு மாதத்தில் 50 ஆயிரம் போ்: இதைத் தொடா்ந்து, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 88,826 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 11,983 போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 2,176-ஆக உயா்ந்துள்ளது.

சிறப்பு மருத்துவ முகாம்: சென்னையின் 15 மண்டலங்களில் கடந்த மே மாதம் முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற 15 லட்சத்து 24,505 பேரில் கரோனா அறிகுறி உள்ள 81,910 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 15,758 பேருக்கு கரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த சிறப்பு மருத்துவ முகாம் மூலம் மொத்த பாதிப்பில் 19 சதவீதம் பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சிகிச்சை பெற்று வருவோா் விவரம் மண்டலம் வாரியாக

மண்டலம் எண்ணிக்கை

1. திருவொற்றியூா் 453

2. மணலி 113

3. மாதவரம் 619

4. தண்டையாா்பேட்டை 661

5. ராயபுரம் 827

6. திரு.வி.க. நகா் 931

7. அம்பத்தூா் 1,334

8. அண்ணா நகா் 1,250

9. தேனாம்பேட்டை 900

10. கோடம்பாக்கம் 1,357

11. வளசரவாக்கம் 890

12. ஆலந்தூா் 561

13. அடையாறு 944

14 பெருங்குடி 526

16. சோழிங்கநல்லூா் 449
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com