விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடி ஆஞ்சனேயர் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்றது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியையொட்டி நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் புதன்கிழமை சிறப்பு திருமஞ்சனம் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.