சென்னை: இப்போது நடைபெறும் எல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா குற்றம் சாட்டியுள்ளார்.
வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்துவது தொடர்பான வழக்கில் தீபாவிற்கு நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது இதுதொடர்பாக வெள்ளியன்று அவர் தெரிவித்துள்ளதாவது:
பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தத்தினால்தான் எல்லாருக்கும் தலைவலி ஏற்பட்டது. இப்போது நடைபெறும் எல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான்.
நான் இப்போது ஜெயலலிதாவின் ஆன்மாவைதான் நம்பியுள்ளேன்
ஜெயலலிதாவின் சொத்துக்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை; நான் நடத்துவது சொத்துக்கான போராட்டம் அல்ல; உரிமைக்கான போராட்டம்!
சசிகலா குடும்பத்தினரால் நான் பலமுறை அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். சசிகலாவால்தான் என்னால் வேதா இல்லத்திற்கு செல்ல முடியவில்லை. வேதா நிலையம் எங்களின் உடைமை இல்லை; உரிமை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.