பெங்களூரு: தொடர் மழைப்பொழிவை அடுத்து கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் தற்போது காவிரியில் திறக்கப்படுகிறது.
குறிப்பாக கபினி அணையில் இருந்து 70 ஆயிரம் கன அடி நீரும், கிருஷ்ணா ராஜ சாகர் அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்படுடுகின்றது.