அம்பத்தூரில் அதிகரித்து வரும் கரோனா: சென்னையில் மண்டலவாரியாக பாதிப்பு விவரம்

சென்னையில் அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,510 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
சென்னையில் கரோனா பாதிப்பு
சென்னையில் கரோனா பாதிப்பு

சென்னையில் அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,510 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. எனினும், சமீபமாக சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் இதுவரை 1,08,124 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,290 பேர் உயிரிழந்துள்ளனர். 94,100 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 11,734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்ந்து, சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

தற்போது கோடம்பாக்கத்தில் 1,354 பேரும், அண்ணா நகரில் 1,281 பேரும், அம்பத்தூரில் 1,510 பேரும், வளசரவாக்கத்தில் 824 பேரும், ராயபுரத்தில் 809 பேரும், தண்டையார்பேட்டையில் 619 பேரும், தேனாம்பேட்டையில் 827 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com