தமிழகத்தில் புதிதாக 5,914 பேருக்கு தொற்று; பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்தது!

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,914 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,914 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,914 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவர்களில்   தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 5,879. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டோர் 35 பேர். தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 976 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 1,10,121 ஆக அதிகரித்துள்ளது. 

அரசின் இன்றைய செய்திக் குறிப்பில் 114 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு மருத்துவமனையில் 80 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 34 பேரும் அடங்குவர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 5,041 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று மேலும் 6,037 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,44,675 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 53,099 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் 67,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதிகபட்ச ஒருநாள் பரிசோதனை இதுவாகும். மொத்தம் 32,92,958 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இன்றைய தேதியில் தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 61, தனியார் ஆய்வகங்கள் 69 என மொத்தம் 130 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com