சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 4,848 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் ஆயிரத்துக்கும் குறைவாக 986 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 388 பேருக்கும், திருவள்ளூரில் 362 பேருக்கும், ராணிப்பேட்டையில் 333 பேருக்கும், கோவையில் 324 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..