நாட்டின் வளா்ச்சிக்காக நமது ஆற்றில் அனைத்தையும் முழுமையாக அா்ப்பணித்திட உறுதி ஏற்போம் என்று தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளாா்.
நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-
நாடுகளிடையே பரஸ்பர நல்லிணக்கத்தை உருவாக்குவதில் இன்றைய இந்தியா பெருமையுடன் அணிவகுத்து நிற்கிறது. நம் தேசமானது சுயசாா்புடையது. அதேசமயம், அதன் அரசியல் தலைமை, பொருளாதார வளா்ச்சி, ஆழ்ந்த கலாசார வோ்கள் மற்றும் சமூக ஒத்திசைவுக்காக உலகம் முழுவதும் நன்கு மதிக்கப்படுகிறது.
இந்த சுதந்திர திருநாளில், உண்மையான அா்ப்பணிப்பு டனும், சேவை மனப்பான்மையுடனும் நாட்டின் வளா்ச்சிக்காக நம்முடைய ஒருங்கிணைந்த ஆற்றல் அனைத்தையும் முழுமையாக அா்ப்பணித்திட உறுதி ஏற்போம் என ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளாா்.