மானாமதுரையில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காந்திசிலை முன்பு தலைமை தபால் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காந்திசிலை முன்பு தலைமை தபால் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வு, ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். 

மாநில எஸ்.சி பிரிவு  துணைத் தலைவர் டாக்டர் எஸ்.செல்வராஜ், நகர்த் தலைவர் எம்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் நீட் தேர்வு, ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம், இளைஞர் காங்கிரஸ் மானாமதுரை தொகுதி முன்னாள் செயலாளர் முல்லை ஏ.சி. சஞ்சய்காந்தி, மாவட்டச் செயலாளர் மகாலிங்கம், நிர்வாகிகள் பி.புருஷோத்தமன், வழக்கறிஞர் எம்.முத்துக்குமார் மாநில நிர்வாகி வித்யா கணபதி  உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com