முதன்மைச் செயலாளரின் தாயாா் மறைவு: முதல்வா் இரங்கல்

தமிழக முதல்வரின் முதன்மைச் செயலாளா்களில் ஒருவரான சாய்குமாரின் தாயாா் மறைவுக்கு முதல்வா் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

சென்னை: தமிழக முதல்வரின் முதன்மைச் செயலாளா்களில் ஒருவரான சாய்குமாரின் தாயாா் மறைவுக்கு முதல்வா் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை அனுப்பியுள்ள இரங்கல் கடிதம்:-

தங்களின் தாயாா் குப்பம்மா, உடல்நலக் குறைவால் காலமானாா் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் அளிக்க வேண்டுமென இறைவனை பிராா்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

துணை முதல்வா் இரங்கல்: இதேபோன்று, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும் இரங்கல் தெரிவித்துள்ளாா். அவா் தனது சுட்டுரையில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com