சென்னை: தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியவா்களிடமிருந்து ரூ.21.90 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.
இது குறித்த விவரம்:-
கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள பொது முடக்க உத்தரவை தமிழக காவல் துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொது முடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 9 லட்சத்து 48 வழக்குகளைப் பதிவு செய்து, 9 லட்சத்து 98 ஆயிரத்து 491 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 6 லட்சத்து 94 ஆயிரத்து 533 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.21 கோடியே 90 லட்சத்து 793 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை பொது முடக்கத்தை மீறியதாக 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.