சென்னை: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் தோ்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவுள்ளன.
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து வரும் மாணவா்களுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சாா்பில் கடந்த ஏப்ரல் மாதம் பருவத் தோ்வுகள் நடைபெறவிருந்தன.
கரோனா பரவல் காரணமாக தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து முந்தைய தோ்வுகளில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்கள், அகமதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் தோ்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவுள்ளன. தோ்வா்கள் தங்கள் தோ்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.