காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் முழுவதும் சுத்தம் செய்த கோவில் பணியாளர்கள்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் முழுவதும் சுத்தம் செய்த கோவில் பணியாளர்கள்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலை சுத்தப்படுத்தும் பணியாளர்கள்

காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் நாளை திறக்கப்படுவதை முன்னிட்டு காமாட்சியம்மன் கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் நாளை திறக்கப்படுவதை முன்னிட்டு காமாட்சியம்மன் கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

பொது முடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக கோவில்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் மூடப்பட்டிருந்தது, ஆனால் வழக்கம்போல பூஜைகள் நடந்தன. இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் மிகவும் பிரபலமான காமாட்சி அம்மன் திருக்கோவில், ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், அத்திவரதருக்கு  புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோவில்கள் அனைத்தும் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. 

நாளை செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். காலையில் 7.30 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 

இதுகுறித்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சாமி கோவில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் கூறியதாவது..

அரசு உத்தரவின்படி கோவில்கள் செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கைகழுவும் திரவம் வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல தெர்மல் ஸ்கேனர் மூலம் அவர்களின் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்படுவார்கள். பக்தர்கள் அனைவரும் பொது தரிசன வழியிலேயே சென்று பொது தரிசனம் வழியிலேயே திரும்பிச் செல்ல வேண்டும். 

முக்கிய பிரமுகர்களுக்கான வழியில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. அதேபோல காமாட்சி அம்மன் கோவிலில் காயத்ரி மண்டபத்திலிருந்து அம்மனை தரிசிக்க அனுமதி இல்லை. கோவில்களில் சிவாச்சாரியார்களோ அல்லது பட்டாச்சாரியார்களோ விபூதி, குங்குமம், தீர்த்தம், ஆகியன எதையும் வழங்கமாட்டார்கள் பக்தர்கள் அவர்களாகவே தீபாராதனைத் தட்டில் உள்ள விபூதி, குங்குமம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

அரசு வழிகாட்டுதலின்படி கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முக்கியமாக சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் பக்தர்கள் வரிசையாகச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் திருக்கோவில் செயல் அலுவலர் நாகராஜன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com