தேனி மாவட்டம் கம்பத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வியாழக்கிழமை வயலுக்குச் சென்று கதிரை அறுத்து தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வயலுக்குச் சென்று நெல் கதிர் அறுத்து, தில்லியில் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வியாழக்கிழமை போராட்டத்தைத் தொடங்கினர்.
முன்னதாக வாலிபர் சங்க ஏரியா செயலாளர் லெனின், எஸ்.பன்னீர்வேல் மற்றும் கட்சியினர் ஊர்வலமாக வீரப்ப நாயக்கன் குளம் பகுதிக்கு வந்தனர். அங்கு அருகே உள்ள நெல் வயலில் இறங்க முயன்றனர்.
தெற்கு காவல் ஆய்வாளர் என்.எஸ்.கீதா அவர்களை வழிமறித்தார். பின்னர் வாலிபர் சங்கத்தினர் குளக்கரையில் நின்று மாட்டு வண்டியில் ஏறி நெல் கதிரை கையில் வைத்துக்கொண்டு ஆண்களும் பெண்களும் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு கலைந்து சென்றனர்.