விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலியானதாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே முறம்பு மில்கேட் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவரது மூத்தமகன் பொன்சீனி (17), ராஜபாளையம் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இளைய மகன் பிரபாகரன் அதே பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் இவரது மூத்த மகன் பொன்சீனி காலையில் வீட்டில் உள்ள குளியலறையில் இயற்கை உபாதயை கழிப்பதற்காக சென்ற போது சுவிட்சை அழுத்திய போது மின்சாரம் தாக்கி துடித்துள்ளார். இவரது சகோதரர் பிரபாகரன் அண்ணனைக் காப்பாற்ற முயன்ற போது இருவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் பிரபாகரன் சிறுகாயங்களுடன் தப்பினார். பொன்சீனி சம்பவ இடத்திலே கீழே விழுந்துள்ளார்.
பொன்சீனியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பரிசோதித்தபோது ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.