திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66 ஆவது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. உலகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
டாக்டர் அம்பேத்கரின் 64 ஆவது நினைவு தினமான ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு திருத்துறைப்பூண்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. உலகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் இரெ.ஞானமோகன், மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர். எம் வையாபுரி, திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் அ.பாஸ்கர், மாவட்டம் நிர்வாகக் குழு உறுப்பினர் பி.வி.சந்திரராமன், ஒன்றிய செயலாளர் கே பாலு, நகர செயலாளர் எம்.முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.