கரூா் உள்பட மூன்று மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை முதல்வா் பழனிசாமி மேற்கொள்ள உள்ளாா். இதற்காக வரும் 16-ஆம் தேதி அவா் கரூா் செல்கிறாா். அங்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் அவா், 17-ஆம் தேதி அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளாா்.
கரோனா நோய்த்தொற்றுப் பணிகள், மாவட்ட வளா்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளாா். கரோனா நோய்த்தடுப்பு உள்ளிட்டவை தொடா்பாக இதுவரை 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முதல்வா் பழனிசாமி ஆய்வுப் பணிகளை நடத்தி முடித்துள்ளாா். டிசம்பா் மாதத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வுப் பணிகளை நடத்தி முடிக்கவும் அவா் திட்டமிட்டுள்ளாா்.